Mon. May 20th, 2024

மகாஜனக் கல்லூரி மாணவி தீவிபத்தில் உயிரிழந்துள்ளார்

வீட்டு சுவாமி அறையில் விளக்கேற்றிய மாணவி தீ விபத்து ஏற்பட்ட நிலையில் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ் பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மாணவி சுதர்சன் சுதர்சிகா (வயது 17) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
குறித்த பகுதியைச் சேர்ந்த மாணவி சாமி அறையில் நேற்று திங்கட்கிழமை மாலை விளக்கேற்றிய பின்னர் தீக்குச்சியை சுவாமி தட்டுக்கு கீழோ போட்டுள்ளார். தற்போது பெற்றோல் தட்டுப்பாட்டையடுத்து தட்டுக்கு கீழே சேமித்து பெற்றோல் கலன் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அக்கலனில் தீக்குச்சி நெருப்பு பட்டதில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் குறித்த மாணவி உடல் கருகி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்