Fri. May 17th, 2024

புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்ளும் நாட்டில் அவர்களின் சித்தாந்தம் தொடர்கின்றது!!

தமிழீழ விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னும் நாட்டில் அவர்களின் சித்தாந்தம் தொடர்வதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ஜெயவர்த்தனபுரவில் உள்ள புதிய இராணுவ தலைமையகத்திற்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டு இராணுவத்தினர் முன்னிலையில் பேசும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில், இலங்கை இராணுவமானது நாட்டிற்கு பாரியசேவையை ஆற்றியுள்ளது. இதற்காக முழு நாடும் இராணுவத்திற்கு கடன்பட்டிருக்கிறது.

நீங்கள் அனைவரும் பயங்கரவாதத்திலிருந்து நாட்டை விடுவிப்பதற்கு பங்களித்திருக்கிறீர்கள், ஆனால் விடுதலை புலிகள் சித்தாந்தம் தொடர்ந்து நீடிக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்