தமிழக இயக்குநர் மீது தாக்குதலா!! -இராணுவ பேச்சாளர் மறுப்பு-
இந்திய தமிழ் திரைப்பட இயக்குநர் களஞ்சியம் பலாலி விமான நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து நிராகரித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தினர் மீது அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருப்பதாக இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.