புதிய அதிபா் நியமனத்தில் தொடா்ந்தும் இழுபறி!
புதிதாக நியமனம் செய்யப்பட்ட 11 அதிபா்கள் ஒத்துமாறி கடமைகளை பொறுப்பேற்றிருக்கும் நிலையில் 10 போ் கடமைகளை பொறுப்பேற்காமல் மேன்முறையீடு செய்துள்ளனா்.
நீண்டகாலமாக ஆசிரியர்களாக பணியாற்றிய சமயம் வன்னியின் கஸ்ரப் பிரதேசங்களில் பணியாற்றியே யாழ்.வந்த நிலையில் தற்போது அதிபர் சேவையில் மீண்டும் வன்னியில் பணியாற்றுமாறு
நிர்ப்பந்திக்கப்படுவதோடு வன்னியிலும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலமை காணப்படுகின்றது என மேன்முறையீடு செய்துள்ள 21 அதிபா்கள் கூறியுள்ளனா்.
இந்நிலையில் மேன்முறையீடு செய்த 21 பேரில் நேற்றைய தினம் ஒரே நாளில் 11 பேர் ஒத்துமாறி கடமைகளை பொறுப்பேற்றதுடன் இதுவரையில் 64 பேர் தமது கடமையினைப் பொறுப்பேற்றனர்.
இருந்தபோதும் இன்னமும் 10 பேர் கடமைகளைப் பொறுப்பேற்காத நிலையில் இவர்களிற்கான காலம் நாளையுடன் நிறைவடைகின்றமையும் குறிப்பிடத்தக்கது.