Sun. May 19th, 2024

காதல் விவகாரம்! முஸ்லிம் பெண்ணை கடத்திய கும்பல் ஓமந்தையில் கைது.

கிளிநொச்சி வைத்தியசாலை பணியாளர் ஒருவர் விடுதியில் தங்கியிருந்த சமயம் விடுதிக்குள் நுழைந்த குழுவொன்று கதவினை உடைத்து ஊழியரை கடத்திய கும்பல் ஓமந்தையில் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவா் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் ஆய்வுகூடப் பணியாளராக கடமையாற்றுகின்றார். இந்த நிலையில் நேற்றுக் காலை 8 மணியளவில்

வைத்தியசாலையின் விடுதியின் பின்புறமாக நுழைந்த சிலர் கதவினை உடைத்து உட்புகுந்து ஊழியரை இழுத்துச் சென்று கயசில் ஏற்றி தப்பிச் சென்றுள்ளனர்.

இதனால் வைத்தியசாலை வளாகம் பரபரப்படைந்த நிலையில் அங்கிருந்த சிலர் கயசின் இலக்கத்தை அவதானித்தனர். இவ்வாறு அவதானிக்கப்பட்ட இலக்கம் ஏ 9 வீதியில் உள்ள

பொலிஸ் நிலையங்களிற்கு தகவல் வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட தகவல் ஓமந்தை சோதனைச் சாவடிக்கும் வழங்கப்பட்ட நிலையில் சோதனைச் சாவடியில் நின்ற படையினரால்

குறித்த கயஸ் மடக்கிப் பிடிக்கப்பட்டது. இதன்போது குறித்த பெண்னை தூக்கிச் சென்றவர்களும் பெண்ணின் உறவுக்காரா்கள் எனவும் குறித்த முஸ்லீம் யுவதி தமிழ் இளைஞரை காதலிப்பதனால்

அவரை திருமணம் செய்து சென்று விடுவார் எனக் கருதியே தூக்கிச் சென்றதாகவும் தெரியவருகின்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்