Sun. May 19th, 2024

இப்படியும் ஒரு தாய்! அயன் பொக்ஸால் உடல் முழுவதும் சூடு, 3 நாட்கள் ஒளித்து வைத்து கொரூரம்.

9 வயதான சிறுவனுக்கு அயன் பொக்ஸை சூடாக்கி உடல் முழுவதும் சூடு வைக்கப்பட்ட நிலையில் படுகாயம டைந்த சிறுவன் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் சிறுவன் தாய் மீது சட்ட நட வடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை சென்ற அப்பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அப்பாடசாலையின் அதிபரை சந்தித்து இங்கு தரம் 4ல் கல்வி கற்கும் 9 வதுடைய குறித்த சிறுவன் ஒருவனுக்கு

அச்சிறுவனின் தாய் மின்னளுத்தியால் சூடு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து குறித்த பாடசாலை அதிபரும் அங்கு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரும்

மாணவனின் வீட்டுக்கு சென்று சிறுவனை பார்க்க முற்பட்டபோது முதலில் மறுத்த தாய் பின்னர் மகனை காண்பித்துள்ளார். உடலில் பலத்த காயங்களுடன் காணப்பட்ட சிறுவனை

அழைத்துக் கொண்டு அதிபரும் ஆசிரியரும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதனையடுத்து ஆரம்பக்கட்ட சிகிச்சை மற்றும் விசாரணைகளையடுத்து சிறுவன் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

குறித்த சிறுவன் கடந்த சனிக்கிழமை மதரசாவுக்கு செல்லாமல் தூக்கத்தில் இருந்துள்ளான். இதன்போது சிறுவனின் தாய் சிறுவனை குர்ஆன் மதராசாவுக்கு செல்லுமாறு

வற்புறுத்திய நிலையில் சிறுவன் அங்கு காணப்பட்ட மின்னளுத்தியை எடுத்து தூக்கி எறிந்துள்ளான். இதையடுத்து ஆத்திரமடைந்த தாய் மின்னளுத்தியை சூடாக்கி

சிறுவனின் உடம்பின் பல இடங்களில் சூடு வைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மூன்று தினங்களாக எந்தவொரு சிகிச்சையும் சிறுவனுக்கு செய்யாமல்

வீட்டுக்குள்ளேயே வைத்திருந்ததாகவும் தெரிய வருகின்றது. இச்சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகம் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை வழங்கியுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்