Sat. May 18th, 2024

பிற்பகல் 2 மணி வரை , 6 தேர்தல் மாவட்டங்களில் 70% த்தை தாண்டிய வாக்குப்பதிவு

இன்று பிற்பகல் 2.00 மணியளவில் ஜனாதிபதித் தேர்தல் வாக்காளர் எண்ணிக்கை 70 சதவீதமாக இருப்பதாக பல தேர்தல் மாவட்டங்கள் தெரிவித்துள்ளன.

தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7.00 மணிக்கு நாடு முழுவதும் 12,845 வாக்குச்சாவடியில் தொடங்கி இடம்பெற்று வருகிறது
அதன்படி, பொலன்னருவை , பதுளை , இரத்தினபுரி , கண்டி, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை ஆகிய இடங்களில் 70% வாக்காளர்கள் பிற்பகல் 2.00 மணி வரை வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில், திருகோணமலை, குருணாகலை மற்றும் கொழும்பு ஆகிய தேர்தல் மாவட்டங்களில் 60% வாக்களிப்பு பதிவாகியுள்ளது.

களுத்துறை, புத்தளம் , நுவரெலியா மற்றும் கம்பாஹா தேர்தல் மாவட்டங்களில் வாக்காளர் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் காலி தேர்தல் மாவட்டத்தில் 67% வாக்காளர்கள் இதுவரை வாக்களித்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்