Sun. May 19th, 2024

பிறந்த சிசுவை மண்ணில் புதைத்த தாய்

கிளிநொச்சி மாவட்டத்தில், தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் பெண்ணொருவர், தான் பெற்ற சிசுவை மண்ணில் புதைத்துவிட்டதாகப் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர், திடீரென மயக்கமடைந்த நிலையில், நேற்று (13) மாலை மீட்கப்பட்டு, கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டார்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையொன்றைப் பிரசவித்து உள்ளமைக்கான ஆதாரங்கள் இருப்பதாக, பொலிஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். வைத்தியசாலைக்குச் சென்ற பொலிஸார், அப்பெண்ணிடம், மேற்கொண்ட விசாரணையில், தனக்குக் குழந்தை பிறந்ததாகவும் அக்குழந்தையை மண்ணுக்குள் புதைத்துவிட்டதாகவும் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
பிரமனந்தனாற்றில் புதைத்து விட்டதாகத் தெரிவித்த அப்பெண்இ சிறிது நேரத்தின் பின்னர் உழவனூர் எனக் கூறியுள்ளார். அவர் மாறி மாறித் தகவல்களை வழங்கிவருவதால் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தைக்  கண்டுபிடிப்பதில் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார்இ சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்