பிரேமதாசாவை ஆதரித்து வடமராட்சியில் ரணில் பிரச்சாரம்
இன்றுஇமையாணன் யாழ் பீச் மண்டபத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வெற்றி பெறுவதற்கான தேர்தல் பிரசாரக் கூட்டம் நடை பெற்றது. பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க அமைச்சர் ராஜித சேனாரத்ன இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கலந்து கொண்டார்கள். பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க பேசியபோது வடமராட்சியை சுற்றுலா மையமாக மாற்றுவதோடு, தொழிற்சாலைகள் அமைப்பதாகும், வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகவும் தெரிவித்தார். மேலும் தெரிவித்த அவர், வடபகுதியை அபிவிருத்தி செய்வதற்கு முன்னுரிமை வழங்குவதாகவும் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக பொதுமன்னிப்பு வழங்குவதுடன் யாழ்ப்பாணத்தை நவீனமயமாக்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பதாகவும் கூறினார்