Wed. May 15th, 2024

பாதுகாப்பு படையினரை அடிமைகளாக பயன்படுத்த அனுமதிக்கமாட்டேன் -சஜித்

அரச குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்புப் படை வீரர்களை அவர்களின் வீட்டு ஊழியர்களாகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்றுதேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா நேற்று தெரிவித்தார்.

அதற்கு பதிலாக, போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள், பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு சேதம் விளைவிப்பவர்களை கைது செய்து கொண்டு வர பாதுகாப்பு படையினரை பயன்படுத்த போவதாக அவர் குறிப்பிட்டார்

கண்டி மாவட்ட “ரணவீரு சமுலுவா” நிகழ்ச்சியில் பேசிய திரு பிரேமதாச, பாதுகாப்புப் படையினரின் நலன் தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி பணிக்குழுவை நியமிப்பதாகவும், அது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கபோவதாகவும் கூறினார்.

இந்த கூட்டத்திற்கு ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நிசங்கா ரணவான தலைமை தாங்கினார், இதில் ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு படையின் ஓய்வுபெற்ற வீரர்கள் கலந்து கொண்டனர்.

சக்திவாய்ந்த நபர்களால் கார் பந்தயத்திற்காக மணல் பைகளை எடுத்துச் செல்லவும், குப்பைகளை அகற்றவும், வடிகால்களை சுத்தம் செய்யவும் பாதுகாப்பு படையினர் பயன்படுத்தப்பட்ட ஒரு காலம் இருந்தது என்று கூறிய அமைச்சர் , இத்தகைய அடிமைத்தனத்தை எனது ஆட்சியின் கீழ் நான் அனுமதிக்க மாட்டேன் என்றும் கூறினார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்