யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட இறுதியாண்டு மாணவன் தூக்கிட்டு தற்கொலை
யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் ஒருவர் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த விடுதி யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலைக்கு முன்பாக உள்ளது கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் இவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என தெரியவருகிறது .
மன்னாரைச் சேர்ந்த மருத்துவபீட இறுதியாண்டு மாணவரான கியூமன் என்பவரே தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
உயிரிழந்தவரின் நண்பர்கள் விடுமுறைக்குச் சென்று இரண்டு நாட்களின் பின்னர் அறைக்குத் திரும்பி வந்து பார்த்த போது அறையில் துர்நாற்றம் வீசியுள்ளது. அறையை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது குறித்த மாணவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்துள்ளார். இந்த நிலையில் குறித்த மாணவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்