பிரித்தானியாவில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் சிலர் நேற்று நள்ளிரவு நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் உள்ளிட்ட 207 பேர் இவ்வாறு நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சிலவா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.
இவ்வாறு அழைத்துவரப்படுபவர்கள் முப்படையினரால் நடாத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் கண்காணிக்கப்படவுள்ளதாவும் ராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.