பாராளுமன்ற தேர்தலை மையப்படுத்தி 50 நாள் வேலைத்திட்டம்!! -ஜே.வி.பி அறிவிப்பு-
நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலை இலக்குவைத்து 50 நாள் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கப்படவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.
இத்தகவலை மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி ஜனவரி மாதம் 31ஆம் திகதி 50 நாள் வேலைத்திட்டமொன்றை நாடு முடிவதும் நடமுறைப்படுத்த தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் தகவல் வெளியிட்டார்.