ஒரு இலட்சம் இளைஞர், யுவதிகளுக்கு அரிய வாய்ப்பு!!
அரச சேவையில் ஒரு இலட்சம் இளைஞர், யுவதிகளை புதிதாக உள்வாங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போதே இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஸ் பத்திரண மேற்படி தகவலை வெளியிட்டார்.
சாதாரண தரத்திற்கும் குறைவான கல்வித் தகைமை கொண்டவர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
6 மாதங்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு, பயிற்சியை நிறைவு செய்யும் இளைஞர், யுவதிகளுக்கு பயிற்சி பெற்ற துறைக்கு ஏற்ப அரச வேலைவாய்ப்புகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழு என்ற தொணிப் பொருளில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அதற்கான திணைக்களம் இயங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.