பாடசாலைக்கு சீல் அதிபர், ஆசிரியர் தனிமைப்படுத்தல்
கரவெட்டி சுகாதார பணிமனைக்குட்பட்ட யா/திரு இருதயக் கல்லூரிக்கு (sacred heart college) இன்று சீல் வைக்கப்பட்டது.
அனுமதி பெறாமல் தரம் 5 மாணவர்களுக்கான விசேட வகுப்புக்கள் நடத்தியதுடன் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காது செயற்பட்டமை அறியப்பட்டதையடுத்தே கல்லூரிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதனால் கல்லூரி அதிபர், இன்று கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட ஆசிரியர் ஆகியோரும் இன்றிலிருந்து எதிர்வரும் 20ம் திகதி வரை சுயதனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர்.