Fri. May 17th, 2024

தாலிக்கொடியை அபகரித்த பெண்

வீட்டுத் திட்டம் தருவதாக கூறி வயோதிப பெண்ணின் தாலிக் கொடியை பெண் ஒருவரால் அறுத்துச் சென்ற சம்பவம் ஒன்று நேற்று புதன்கிழமை  இணுவில் ரயில் நிலையத்திற்கு அண்மையில் உள்ள வீடொன்றில்  நடைபெற்றுள்ளது. சம்பவம் பற்றி தெரியவருவதாவது, மோட்டார் சையிக்கிளில் வந்த பெண், இணுவில் ரயில் நிலையத்திற்கு அண்மையில் தனியாக வசித்து வரும் வயோதிப பெண்ணை வீட்டிற்கு வெளியே அழைத்துள்ளார். அவரிடம் உங்களுக்கு வீடு உள்ளதா. இல்லை என்றால் வீட்டுத் திட்டம் தருவதாக கூறி, அதற்கு பணம் தரப்படும் ஆனால் முதலில் கட்டுவதற்கு உங்களிடம் சிறிய பணம் இருக்க வேண்டும் உள்ளதா எனக் கேட்டுள்ளார். அதற்கு அந்த வயோதிபப் பெண்ணும் வீடு இல்லை எனக்கு வீட்டுத் திட்டம் தாருங்கள் எனது தாலிக்கொடியை அடகு வைத்து பணம் திரட்டுவதாக கூற அந்த பெண்ணும் தாலிக் கொடியைப் பார்ப்போம் எனக் கேட்டுள்ளார்.  வயோதிப பெண்ணும் அறைக்குள் வைக்கப்பட்ட தாலிக்கொடியை கொண்டு வந்து காட்டியுள்ளார்.  மோட்டார் சைக்கிளில் வந்த பெண் தாலிக்கொடியை வயோதிபப் பெண்ணிடமிருந்து இழுத்து அவரையும் காலால் உதைத்து கீழே விழுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார். மோசடி செயலில் ஈடுபட்ட பெண் கறுப்பு நிற ஜக்கற் போட்டு வந்துள்ளதாகவும் சுன்னாகம்  பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். (அதிகளவு பகிருங்கள் பலர் விழிப்புணர்வு ஏற்படட்டும். அண்மையில் கரவெட்டி பகுதியில் மோசடியில் ஈடுபட்டவர்களை விழிப்படைந்தவர்களால் திருடன் அகப்பட்டமை குறிப்பிடத்தக்கது. )

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்