பஸ் கட்டணங்களில் மாற்றம் இல்லை
பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாதென்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். தற்போது கொரோனா தொற்று அதிகமானதையடுத்து பஸ்ஸில் பிராயாணம் செய்யும் பிரயாணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதோடு, பிரயாணிகளின் பாதுகாப்பு கருதி ஆசனங்களுக்கு ஏற்ப சமூக இடைவெளிகளில் ஏற்றப்பட்டு வருகின்றது. இதனால் பஸ் உரிமையாளர்கள் நட்டம் ஏற்படுவதாக கூறுகின்றனர். ஆனால் பிரயாணிகளின் நன்மை கருதி பஸ் கட்டணங்களில் மாற்றம் செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.