Sat. May 18th, 2024

பளை மத்திய கல்லூரியில் சாதாரணதர கல்வி பரீட்சை  எழுதிய மாணவனை காணவில்லை-

கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியில் சாதாரணதர கல்வி பரீட்சை  எழுதிய மாணவனை காணவில்லை-பளை பொலீசில்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

கிளி /பளை மத்திய கல்லூரி பாடசாலையில் கல்வி கற்று வந்த முள்ளியடி பளையைச்சேர்ந்த R.அனோச்   எனும் மாணவன் கடந்த நான்கு நாட்களாக காணவில்லை என பளை போலீஸ் நிலையத்தில் (28/04/2020)   அனோச்சின் பெற்றோர்களால்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மாணவன் பளை  மத்திய கல்லூரியில் கடந்த வருடம் 2019ஆண்டு சாதாரணதர கல்வி பரீட்சை  எழுதி முடிவுக்காக காத்திருந்தவர் எனவும் மாணவனுடைய பெற்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மாணவனுடைய பெற்றோர்கள் கடந்த ஒரு சில நாட்களாக தங்களுடைய உறவினர்களின் வீடுகளிலும் தேடி பயன் எதுவும் இன்றி  பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்