மரத்தில் இருந்து தவறி விழுந்து 13 வயதுச் சிறுவன் பரிதாபமாக பலி
மரம் ஒன்றில் ஏறிய 13 வயதுச் சிறுவன், அதிலிருந்து தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
இந்தச் சம்பவம் கல்வியங்காடு புதிய செம்மணி வீதியில் 30/4/2020 வியாழக்கிழமை மாலை இடம் பெற்றது.
சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மதுமிதன் (வயது-13) என்ற சிறுவனே உயிரிழந்தார்.
சிறுவனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.