Tue. May 21st, 2024

கிளிநொச்சி, இரணைமடு சந்தியில் நேற்று (29/4) மாலை இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி, இரணைமடு சந்தியில் நேற்று (29/4) மாலை இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

தனியார் பேருந்தொன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியமையினால் இவ்விபத்து நேர்ந்துள்ளது.

கிளிநொச்சி இரணைமடு சந்திக்கு அண்மையில், 247ம் கட்டை பகுதியில் இந்த சம்பவம், நேற்று மாலை 6.00 மணியளவில் நடந்தது.

இலக்கத்தகடு பொருத்தப்படாத புத்தம் புதிய பல்சர் மோட்டார்சைக்கிளே இவ்வாறு விபத்திற்குள்ளானது.

இதன்போது கிளிநொச்சி உச்சிப்புளத்தைச் சேர்ந்த 19 வயதுடைய கந்தசாமி கஜ ஆனந்த் என்பவரும், குமார் தனுசன் என்பவரும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்