பளுதூக்கலில் மூளாய் சைவப்பிரகாசாவிற்கு தங்கம்
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான பளுதூக்கல் போட்டியில் சி.சயூரி தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துக் கொண்டார்.
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான பளுதூக்கல் போட்டிகள் யாழ் இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் 17 வயதிற்குட்பட்ட 81 கிலோ எடைப் பிரிவில் மூளாய் சைவப்பிரகாசா வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த சி.சயூரி 49கிலோ பளுவைத் தூக்கி தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துக் கொண்டார்.