பலாலி விமானநிலையத்தை புனரமைக்க அமைச்சரவை அனுமதி
பலாலி சர்வதே விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியாவிடமிருந்து 300 மில்லியன் ரூபா நிவாரணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சமர்பித்திருந்த அமைச்சரவை பத்திரத்திற்கு நேற்று அமைச்சரவை அனுமதியளித்துள்ளது .
இதனை தொடர்ந்து இது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளதாகவும் அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.