Fri. May 17th, 2024

பலத்த போராட்டத்தில் இரு பிரிவுகளின் யூனியன் கல்லூரி சம்பியன்

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்ட தொடரில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அணி பலத்த போராட்டத்தில் இரு பிரிவுகளில் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

இதன் இறுதியாட்டங்கள் நேற்று வியாழக்கிழமை தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
20 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான இறுதியாட்டத்தில் யூனியன் கல்லூரி அணியை  எதிர்த்து சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி அணி மோதியது.
ஆட்டம் ஆரம்பம் முதல் இறுதிவரை இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்களல்ல என்பதனை நிரூபிக்கும் முகமாக விளையாடினர். இருப்பினும் ஆட்ட நேர முடிவில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அணி 30:28 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர். 3ம்டத்தை தெல்லிப்பளை மகாஜன கல்லூரி அணி பெற்றது.
16 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான இறுதியாட்டத்தில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அணியை எதிர்த்து மன்னார் ஜோசப்வாஸ் மகா வித்தியாலய அணி மோதியது. இதிலும் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடினர். இருப்பினும் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அணி 13:11 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர். 3ம் இடத்தை வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலய அணி பெற்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்