Sun. May 19th, 2024

பருத்தித்துறை தனியார் பஸ் சேவை இயங்குகிறது

தனியார் பஸ் சேவை மட்டுப்படுத்தப்பட்டளவில் சேவை நடைபெறும்

பருத்தித்துறை தனியார் பஸ் சேவைகள் சங்கத் தலைவர் தெரிவிப்பு
பருத்தித்துறை தனியார் பஸ் சேவை சங்கத்தினால் மேற்கொள்ளப்படும் பஸ் சேவைகள் தொடர்ந்தும் நடைபெறும் என பருத்தித்துறை தனியார் பஸ் சேவை சங்க தலைவர் அன்ரன் அறிவித்துள்ளார்.
இன்றைய தினம் அரச விடுமுறையாக இருப்பதனால் எமதூ சேவை மட்டுப்படுத்தப்பட்டளவில் அரை மணித்தியாலங்களுக்கு ஒரு முறை இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இராஜகிராமம் பகுதியைச் சேர்ந்த கூலர் வாகனம் ஓடிய ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த பலர் பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்நுநர்களாக இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாம் அப்பகுதியை சேர்ந்தவர்கள் முச்சக்கர வண்டிகள்,  மற்றும் நெல்லியடி கடைகளில் வேலைகள் மற்றும் நெல்லியடி சந்தை என பல்வேறு தொழில் புரிகின்றனர்.
அவர்கள் வெளியில் வருவதற்கு எதுவித தடையும் விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்