நாளை முதல் நெல்லியடி முடங்கலாம்
நாளை (31) முதல் சில தினங்களுக்கு நெல்லியடி சந்தை, முச்சக்கர வண்டிகள் சேவை என்பன முடக்கப்படலாம் என கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபைத் தலைவர் ஐங்கரன் அறிவித்துள்ளார்.
தற்போது இராஜகிராம பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்து பலரும் நெல்லியடி மத்திய சந்தையுடன் தொடர்புபட்டவர்களாக உள்ளனர்.
இராஜகிராம பகுதியைச் சேர்ந்தவர்களை வெளியே நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்ட போதும் பலரும் அதிகாலை எவருக்கும் தெரியாமல் வெளியேறியுள்ளனர். இதனால் சில தினங்களுக்கு நெல்லியடி மத்திய சந்தை மற்றும் முச்சக்கர வண்டிகள் தரிப்பிடம் என்பன சில தினங்களுக்கு முடக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதுடன். பருத்தித்துறை தனியார் பஸ் சேவைக்கும் தடை விதிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.