Sun. May 19th, 2024

பருத்தித்துறையில் பெண்களுடன் சேட்டையில் ஈடுபட்டோர் கைது செய்து விடுதலை

பருத்தித்துறை நகர் பகுதிகளில் பெண்களுடன் தொடர்ச்சியாக சேட்டைகளில் ஈடுபட்டுவருவதாக பருத்தித்துறை பொலீசாருக்கு  கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், திடீர் சுற்றிவளைப்பு இன்று மேற்கொள்ளப்பட்ட 13 கைது செய்யப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலீஸ் பரிசோதகர் பிரியந்த சமரசிங்க தலமையிலான குழுவே குறித்த 13. பேரையும் கைது செய்து எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வடமராட்சி பகுதியில் தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்லும் பெண்கள் மற்றும் வீதிகளில் போக்குவரத்தில் ஈடுபடும் பெண்கள் போன்றோருடன் தொடர்ச்சியாக சேட்டைகளில் ஈடுபடுவோர், சந்திகளில்  கூட்டமாக நின்று நுகர்வோருக்கு இடைஞ்சல் புரிவோர் என சிலரை கைது செய்து எச்சரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். அத்துடன் தேவையில்லாமல் தெருக்களில் நிற்போரால் போதைவஸ்து விற்பனை மற்றும் பாவனைக்கு தூண்டுதலாகவும் அமைவதனால் தேவையற்று கூட்டமாக நிற்போர் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்