Wed. May 15th, 2024

பயங்கரவாதிகளுக்கு மரண தண்டணை! சஜித் பகிரங்க எச்சாிக்கை.

இலங்கை இராணுவத்திற்கு அதி நவீன ஆயதங்களை வழங்கி பலப்படுத்துவதுடன், பயங்கரவாதிகளுக்கு மரண தண்டணை வழங்குவேன். என ஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிறேமதாஸ கூறியிருக்கின்றாா்.

நிட்டம்புவவில் இன்று நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்திலேயே தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்காக சிறந்த அக்கறை கொண்ட சமூகங்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். நாட்டில் எந்தவொரு சமூகத்துக்கும் ஏனைய சமூகங்களைவிட முன்னுரிமை வழங்கப்படமாட்டாது.

நாட்டில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்போம் என்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை, ருவான்வெல்லவில் இடம்பெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, எனது அரசில் பாதுகாப்பு அமைச்சராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்படுவார்.

அவரது கடமைகளில் நான் தலையீடு செய்யமாட்டேன். புலனாய்வுத் துறைக்கு உரிய பயிற்சிகளை வழங்குவதன் ஊடாக வலுப்படுத்துதல்,

நவீன ரக ஆயுதங்களுடன் இராணுவத்தை மேம்படுத்துவதே எனது முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்” என்றார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்