நிலத்தடியில் தங்கம்! திருகோணமலையில் கண்டு பிடிப்பு.
திருகோணமலையில் நிலத்தடியில் தங்கம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாக புவிச்சாிதவியல் சுரங்கங் கள் பணியக தலைவா் அசேல இத்தவல கூறியுள்ளாா்.
கம்பஹா பிரதேச செயலக அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தங்க வளம் இருக்கும் இடத்திற்கு புதிய பொருளாதார பெறுமதியை ஏற்படுத்த தனியார் முதலீட்டாளர்களின் உதவியை பெற்றுக்கொள்ள உத்தேசித்துள்ளோம்.
இலங்கையில் தங்கம் இருப்பதை உறுதிப்படுத்த முடியும். சேருவில பிரதேசத்தை சூழ இருக்கும் 100 கிலோ மீற்றர் சுற்று வட்டத்தில் சுமார் 5 கிலோ மீற்றர் பரப்பளவில்
தங்கம் இருப்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது எனவும் அசேல இத்தவல குறிப்பிட்டுள்ளார்.