Wed. May 15th, 2024

இளைஞன் மீது முறிந்து விழுந்த தென்னை. சிகிச்சை பலனின்றி இளைஞன் உயிாிழப்பு.

மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞன் மீது தென்னை மரம் விழுந்ததால் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சோ்க்கப்பட்ட இளைஞன் உயிாிழந்துள்ளான்.

திவுலபிடிய-கம்பஹா பிரதான வீதியின் வெடகெதர பகுதியில் வைத்து குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பலத்த காயமடைந்த மேற்படி இளைஞர் திவுலபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் திவுலபிடியவை சேர்ந்த 24 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்