நேற்று மாலை தொண்டைமானாற்றில் இந்திய மீனவர் மூவர் கைது
அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் மூவர் இலங்கை கடற்படையினரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு கடற் பரப்பில் ஒரு படகில் மூவரும் கரைக்கு நெருக்கமான பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே கைதாகியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன