நெல்லியடி வர்த்தகர்களும் போராட்டத்திற்கு ஆதரவு
நெல்லியடி வர்த்தக நிலையங்கள் மற்றும் நெல்லியடி பொதுச் சந்தை வியாபாரிகளும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இன்று நடைபெறும் நாடளாவிய ரீதியிலான தொழிற்சங்கங்களின் போராட்டத்திற்கே இவர்களால் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
இன்று நெல்லியடி வர்த்தக நிலையங்கள் எவையும் திறக்கப்படவில்லை. அத்துடன் நெல்லியடி பொதுச் சந்தை திறக்கப்பட்ட போதிலும் உற்பத்தியாளர்கள் மற்றும் சந்தை வியாபாரிகள் எவரும் வருகை தராமையால் சந்தைச் செயற்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளது.