Fri. May 17th, 2024

நெல்லியடி ராஜகிராமத்தில் 17 வயது யுவதி அரலி விதை உட்கொண்டு மரணம்

15.05.2020 இன்று கரவெட்டி ராஜ கிராமத்தில் அரலிக்காய் உண்டு 17 வயது யுவதி சாந்த ரூபன் கிருஷனசாந்தி தற்கொலை செய்துள்ளார். திருமணம் செய்து இரண்டு மாதங்களாக கணவனுடன் முரண்பட்டுக் கொண்டு இருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  இன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மரண விசாரணை நடைபெற்றது. மரண விசாரணை அதிகாரி வேலுப்பிள்ளை பாஸ்கரன் அவர்கள் விசாரணையில் இளம்வயதில் தற்கொலைகள் ராஜ கிராமத்தில் நடைபெறுவதாகவும் அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் இருப்பதாகவும் அவர்களுடைய கிராமத்தில் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துவது மூலம் அவர்களை நல்வழிக்கு கொண்டு வர முடியும் என நெல்லியடி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.  உடனடியாக ராஜ கிராமத்தில் அரலி  மரங்கள் அதிகமாக இருப்பதனால் அது நஞ்சு தன்மையுள்ளதாகவும்  இருப்பதனால் அந்த மரங்களை உடனடியாக அளிக்குமாறு போலீசாரிடம் கூறியுள்ளார். பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்