Fri. May 17th, 2024

நெல்லியடியில் மீட்டர் வட்டிக்கு பணம் வசூலிக்க மிரட்டல், தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய பொலிஸார்

15.05.2020.இன்று கரவெட்டியில் உள்ள ஒரு இளம் குடும்பஸ்தரின் வீட்டில் மீட்டர் வட்டிக்கு பணம் கொடுத்துவிட்டு மீற்றர் வட்டி பணத்தை பெறுவதற்காக சென்ற நபர்,    குடும்பஸ்தர் வீட்டில் இல்லாத நிலையில் வீட்டில் இருந்த பெண்மணியை அநாகரிகமாக கண்ட வார்த்தைகளால் பேசியுள்ளார். ஊரடங்குச் சட்டம் இருப்பதல் தற்பொழுது உழைப்பு இல்லாத நிலையில் பணம் தரமுடியாது உள்ளதாக பெண்மணி கூறியும்,  பணம் தராவிட்டால் தான் இங்கிருந்து போவது இல்லை என அடம் பிடித்து வீட்டில் இருந்துள்ளார். அவரின் தொல்லை தாங்கமுடியாத அந்த  பெண்மணி தற்கொலை செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்தச் சம்பவம் நெல்லியடி போலீசாருக்கு தெரிய வந்ததையடுத்து, போலீசார் உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்து தற்கொலை முயற்சி யில்இருந்த பெண்மணியைக் காப்பாற்றியதுடன்,  மீட்டர் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  பொலிஸார் தெரிவித்துள்ளார்கள் .

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்