நெல்லியடி பொலீஸ் உத்தியோகத்தர்களால் பயன்தரு மரங்கள் நாட்டி வைக்கப்பட்டன
நெல்லியடி பொலீஸ் நிலையத்தினரால் வடமராட்சி பகுதியில் பயன்தரு மரங்கள் நாட்டி வைக்கப்பட்டன.
வடமராட்சி கரணவாய் உப்புரோட் மண்டான் பகுதியில் உள்ள வீதியின் இரு மருங்கிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை பயன்தரு மரங்கள் நாட்டி வைக்கப்பட்டன.
நெல்லியடி உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி தயானந்தன் தலைமையில் இச்செயற்பாடு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.