நெல்லியடி பொலீஸ் அதிரடி மக்கள் கவனம்
நெல்லியடிப் பகுதியில் வீதி ஒழுங்கை கடைப்பிடிக்காதோர் மீது தண்டப்பணம் அறவிடும் நடவடிக்கையில் நெல்லியடிப் பொலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான நெல்லியடி வீதியின் இடது புறமாக திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளிலும் வலது புறமாக செவ்வாய், வியாழன், சனிக் கிழமைகளிலும் வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனைப் பொருட்படுத்தாமல் வாகனங்களை தரிப்போர் மீது தண்டப்பணம் அறவிடும் நடவடிக்கையில் நெல்லியடிப் பொலீஸார் ஈடுபட்டுள்ளனர்.