நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் களவுபோன மாடுகள்
17.09.2020 இன்று நெல்லியடி புலனாய்வு துறைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து போலீசாருடன் துன்னாலை தோட்டப் பகுதியில் இரண்டு மாடுகள்களவாக கட்டி இருப்பதாககிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் இரண்டு மாடுகளையும் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள். தற்போது இரண்டு மாடுகளும் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் இருப்பதாகவும் உடனடியாக மாடுகள் களவு போயிருந்தால் நெல்லியடி போலீசாருடன் தொடர்பு கொண்டு அடையாளப்படுத்தி கால்நடைகளை பெற்றுக்கொள்ளுமாறு பொலிசார் பொது மக்களை கேட்டு கொள்ளுகின்றார்கள்.