கரவெட்டி பிரதேச சபையில் வாக்குவாதம், ஊடகவியலாளர்kalai
17.09.2020.இன்று வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நடைபெற்றது காலை 10 மணிக்கு தவிசாளர் தலைமையில் ஆரம்பமானது இரண்டு நிமிடம் அக வணக்கம் செலுத்தப்பட்டது. வணக்கம் செலுத்தப்பட்டு முடிவடைந்த நிலையில் கூட்டம் ஆரம்பமான வேளையில் ஆளுங் கட்சி உறுப்பினர்களும் எதிர்க் கட்சி உறுப்பினர்களும் தவிசாளருடன் முரண்பட்டு எழுந்து நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். இதனால் மண்டபம் அல்லோப்பட்டு காணப்பட்டது. எதிர்வரும் வரவு செலவுத்திட்டவாசிப்பின் போது தோற்கடிக்க படுவீர்கள் என ஆளுங்கட்சியில் சிலரும் எதிர்க்கட்சியின் சிலரும் சவால் விட்டுக் கொண்டார்கள். இந்நிகழ்வில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் ஆரம்பத்தில் இருந்த ஊடகவியலாளரை கடும் தொனியில் வீடியோ எடுக்க வேண்டாம் என தவிசாளர் எச்சரித்தார். வீடியோ எடுத்தால் வெளியேற்றப் படுவார்கள் எனவும் திரும்பத் திரும்பக் கூறினார்.