நெல்லியடியில் சைக்கிள் திருடியவர் கைது
16.09.2020 அன்று புதன்கிழமை நெல்லியடி நகரப்பகுதியில் உள்ள புடவை கடை ஒன்றில் பத்தாயிரம் ரூபாவுக்கு புது புடவைகள் வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் நெல்லியடி நகரப் பகுதியில் உள்ள ஒரு வங்கிக்கு முன்னால் நிறுத்தி விட்டு வங்கிக்குள் சென்ற வேளையில் பொதியை திருடிக்கொண்டு ஓடியவரை ஐபி ஆனந்தசுமணஸ்ரீ பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையில் இளைஞனை கைது செய்து விசாரணை நடத்தியபோது, அவரால் இரண்டு சைக்கிள்களும் களவாடப்பட்டது என தெரியவந்துள்ளது. இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு 14. நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்