Fri. May 17th, 2024

நெல்லியடி திருட்டில் பூசகரா? விசாரணை முன்னெடுப்பு

நெல்லியடி மக்கள் வங்கிக்கு முன்பாக உள்ள மகாத்மா வீதியில் சங்கிலி அறுத்த இருவரை அப்பகுதி மக்கள் பிடித்து நையப்புடைக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்றுள்ளது.
குறித்த வீதியால் சையிக்கிளில் ஒரு பெண் பயணித்துக் கொண்டிருந்த போது அவரின் பின்னால் வந்த இருவர் அப்பெண்ணின் கழுத்தில் இருந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓட முயன்ற போது அப்பெண்ணால் சத்தமிடப்பட்டது. அப்போது அப்பகுதியில் வீடு கட்டட நிர்மாணிப்பு வேலை செய்து கொண்டிருந்தவர்களால் திருடர்கள் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு நெல்லியடி பொலீஸாரிம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் தமது உடம்பில் பூநூல் தரித்திருந்துள்ளனர். அத்துடன் ஒருவர் கரவெட்டி அந்தோனியார் ஆலயத்திற்கு முன்பாகவும், இன்னொருவர் அச்சுவேலி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்