நெல்லியடியில் ஹரிஸ் உணவகம் பூட்டு
கொரோனா தொற்றாளர் சென்று வந்ததாக அறியப்படும் நெல்லியடி பகுதியில் இயங்கும் உணவத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
நெல்லியடி பகுதியில் நெல்லியடி எரிபொருள் நிலையத்திற்கு அருகில் இயங்கும் ஹரிஸ் உணவகத்திற்கு இன்று சீல் வைக்கப்பட்டுள்ளது. நேற்று RDAநிறுவனத்தில் பணிபுரியும் ஒருவருக்கு கரவெட்டி சுகாதார பணிமனையால் மேற்கொள்ளப்பட்ட மாதிரி பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் ஹரிஸ் உணவகதில் தேநீர் அருந்திச் சென்றதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் சென்று வந்த இடமாகிய நெல்லியடி உணவகத்திற்கும் சீல் வைக்கப்பட்டது. இவ்வுணவகம் இன்றிலிருந்து எதிர்வரும் 21ம் திகதி வரை தனிமைப்படுத்தி வைக்கப்பட்டதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.