நெருக்கடியின் மத்தியில் நாளை பதவி துறக்கும் ரணில்
பிரதமர் பதவியில் இருந்து நாளை ராஜினாமா செய்ய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முடிவு செய்துள்ளார்.
அதன்படி, திரு விக்ரமசிங்க எதிர்காலத்தில் மீண்டும் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட உள்ளார்.
பிரதமரினதும் மற்றும் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தின் தனிப்பட்ட உடமைகள் தற்பொழுது அகற்றப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் பிரதமரின் பிரத்தியேக ஊழியர்களும் தங்களின் தனிப்பட்ட உடைமைகளை அகற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.