யதியாந்தோட்டா தாக்குதல் வழக்கு தேர்தலுடன் தொடர்புபடுத்தப்படவில்லை – பொலிஸ் தகவல்
இரண்டு குடிகார நபர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் விளைவாகவே யதியந்தோட்டாவில் உள்ள கணேபல்லா தோட்டத்திலிருந்து ஒரு சிறிய தாக்குதல் வழக்கு பதிவாகியுள்ளது என பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்ட்துள்ளது.
தாக்குதல் தொடர்பாக 119 அவசரகால ஹாட்லைன் மூலம் கிடைத்த தகவலின் பேரில், யதியந்தோட்டாவில் பொலிசாரால் விசாரணை தொடங்கப்பட்டது. இருப்பினும், இந்த சம்பவம் தவறாக புகார் செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு தேர்தலுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும், இந்த சம்பவம் முற்றிலும் குடிபோதையில் ஏற்பட்ட வாதத்தின் விளைவாகும் எனவும் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.