Sun. May 19th, 2024

நில்வள கங்கையில் படகு கவிழ்ந்ததில் 2 பிள்ளைகளின் தாய் உயிாிழப்பு.

மாத்தறை- நில்வள கங்கையில் படகு விபத்துக்குள்ளானதில் நீாில் மூழ்கி இரு பிள்ளைகளின் தாய் உயிாிழந்துள்ளாா்.

இந்த விபத்துச் சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மாத்தறை,  உங்கங்கொடை மற்றும் துடாவ ஆகிய கிராமங்கள் இடையே

உள்ள நில்வளா கங்கையை கடப்பதற்கு படகில் சென்ற மூவர்  இவ்வாறு படகுமூழ்கி விபத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து பிரதேச மக்கள் இணைந்து

தீவிர முயற்சியில் ஈடுபட்டு இருவரைக் காப்பாற்றிய போதிலும் குறித்த தாய் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்