தேர்தல் தொடர்பில் 851 முறைப்பாடுகள்!! -8 வன்முறைச் சம்பவங்களும் பதிவு-
நேற்று வியாழக்கிழமை வரைக்கும் ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய 851 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 814 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 8 முறைப்பாடுகளும் மற்றும் 29 வேறு முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 24 மணித்தியாலங்களில் 89 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.