நாளை 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில் மருத்துவர்கள்!!
ஒன்றிணைந்த மருத்துவ சேவைகள் சபை நாளை 8.00 மணி முதல் 24 மணிநேர அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.
2015ஆம் ஆண்டு தொடக்கம் வழங்கப்படாத பதவி உயர்வு உட்பட இன்னும் பல கோரிக்கைகளை முன்னிறுத்தி நாடளாவிய ரீதியில் இப் போராட்டத்தை நடத்த உள்ளதாகவும் ஒன்றிணைந்த மருத்துவ சேவைகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.