Wed. May 15th, 2024

பெற்ற குழந்தைகளை கிணற்றுக்குள் தள்ளிய தாய்!! -தானும் தற்கொலை செய்ய முஸ்தீபு-

நெடுங்கேணி- பட்டிகுடியிருப்பு பகுதியில் தன் இரு பிள்ளைகளை கிணற்றில் போட்டு விட்டு தானும் கிணற்றில் குதிக்க முயற்சித்தபோது அயலவர்களால் தாய் காப்பாற்றப் பட்டுள்ளபோதும் இரு குழந்தைகளும் சாவடைந்துள்ளனர்.

அண்மையில் விபத்தில் மரணித்த பட்டிக்குடியிருப்பைச்சேர்ந்த அமரர் உதயன் என்பவருடைய மனைவி தனது நான்கு வயது பெண்பிள்ளையையும் மற்றும் இரண்டரை வயது ஆண் பிள்ளையையும் கிணற்றுக்குள் போட்டுவிட்டு

தானும் கிணற்றுள் குதிக்க முயன்ற நிலையில் அயலவர்களால் தாய் தடுக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளார். ஆயினும் இரண்டரை வயது மகன் கிணற்றுக்குள்ளே மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிருடன் மீட்கப்பட்டபெண்குழந்தை அவசர சிகிச்சைக்காக அம்புலன்ஸ் மூலம் வவுனியா கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவரும் உயிரிழந்துள்ளார்.
உதயன் சந்தசா-வயது நான்கு உதயன் பவித்திரன்-வயது இரண்டரை ஆகிய இரு குழந்தைகளுமே பலியானவர்கள் ஆவர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்