நாளை முதல் பாடசாலைகள் வழமைக்கு
இலங்கையில் நாளை முதல் அனைத்து அரச பாடசாலைகளினதும் தரம் 6 முதல் 13 ஆம் தரம் வரையான மாணவர்களுக்கான பாடசாலைகள் வழமை போன்று காலை 7.30 மணி முதல் 1.30 மணி வரையில் இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன்
தரம் 1முதல் 5 வரையான பாடசாலைகள் செப்டம்பர் 8 ஆம் திகதி முதல் வழமைக்கு திரும்பும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.