ஏக ஆதிக்கம் செலுத்தி தெல்லிப்பளை பிரதேச செயலக அணி சம்பியன்
யாழ் மாவட்ட பிரதேச
செயலகங்களுக்கு இடையிலான பெண்களிற்கான வொலிபோல் போட்டியில் தெல்லிப்பளை பிரதேச செயலக அணி சம்பியனாகியது.
யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான போட்டிகள் இன்று (01.09.2020) செவ்வாய்க்கிழமை ஆவரங்கால் மத்திய விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது.
இதன் இறுதியாட்டத்தில் தெல்லிப்பளை பிரதேச செயலக அணியை எதிர்த்து சண்டிலிப்பாய் பிரதேச செயலக அணி மோதியது.
இதில் தெல்லிப்பளை பிரதேச செயலக அணி 25:9, 25:10 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுச் சம்பியனாகியது.