நாளை பாடசாலை தொடர்பில் வெளியான அறிவித்தல்
நாளை முதல் பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பமாகி நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
புதிய ஆண்டுக்கான 2ம் கட்ட பாடசாலைகள் நாளை திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகி வழமை போல் நடைபெறவுள்ளது.
இலங்கையில் பாடசாலை விடுமுறை தொடர்பில் பரவிவரும் தகவல் தொடர்பில் கல்வி அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.
நாளையதினம் (17-04-2023) அரச பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டு, அதற்கு பதிலாக வேறொரு திகதியில் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென தகவலொன்று பகிரப்படுகிறது.
இது வெறும் வதந்தி என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்த்குமார் தெரிவித்தார்.
இந்நிலையில், நாளை வழமைபோல அரச பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் இடம்பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.