Tue. May 14th, 2024

நாட்டு மக்களுக்கு விசேட சொற்பொழிவாற்ற தயாராகும் மைத்திரி-இன்னும் ஒருமாதம் மட்டுமே பதவி

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மிக விரைவில் நாட்டு மக்களுக்கு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றவுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இந்த விசேட அறிவித்தல் வெளிவரவுள்ளது. ஏற்கனவே ஜனாதிபதி தேர்தலில் தான் நடுநிலைமை வகிக்கப்போவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவலால் இரண்டு முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களும் அதிர்ச்சியில் உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றது.
மைத்ரிபால சிறிசேன நவம்பர் 16 ஆம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில் இந்த விசேட அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபாலவின் இறுதி அறிவித்தலாக தனது ஜனாதிபதி காலத்தின் நிறைவை ஒட்டியதாகவே இருக்கும் என்று பரவலாக எதிர்ப்பார்க்கப்படுகிறது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்